Sunday 30 April 2017

மயக்குது உன் மதி முகமே..!!!!

                🌸🌸பூமரப்பாவை நீயடி !!!🌸🌸

                                                                                                 விஜயஸ்ரீ பத்மநாபன்

                                                          1



  அழகிய சுபயோக தினத்தில் .....

 ஓர்  இளங்காலைப்பொழுதில்......அதிர்ஷ்ட்ட தேவனாய்

 மூன்று வருடங்களாக  பேசாத  நண்பன் ரவி ....

சிவாவின் ஒர்க் ஷாப் க்கு தேடி வந்து நின்றபோது....

அன்று அர்த்தம் உள்ள நாளானது ...நம் நாயகனுக்கு....

ஆதி அந்த கோபதாபங்களை விட்டுவிட்டு..அனைத்தையும் மறந்து...

"வா..மச்சி .."  பழைய பாசம் பொங்க......மகிழ்ச்சியோடு வரவேற்றான்....சிவா...

ரவிச்சந்திரனும்  பதிலுக்கு புன்னகைக்க...

"சொல்லு மச்சி வீட்ல அம்மா  நல்லா இருக்காங்களா??"

"ம்ம்ம்...."சுரத்தே இல்லாமல்....முனகியவன்....

"முக்கியமான விஷயம் பேச வந்தேன்..சிவா....எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல..." பலத்த பீடிகையோடு

"ஸ்ரீ....." என்று இழுக்க...

ஏற்கனவே ரவி முகம் பார்த்து குழம்பிய....சிவா...

"ஸ்ரீக்கு என்ன ரவி????" பதட்டத்துடன் கேட்க.....!

"உன்ன கட்டிக்க ஆசை படுறா!!!  முகம் கடுக்க சொன்னான்...

இதோடா !!!இதுக்கு தான் இந்த ரியாக்ஷனா??


முன்பு ஸ்ரீயை எனக்கு தருவியா??? என்று சிவா கேட்க போய் தான் ....நட்பு உடைந்தது.... எல்லையும் பிரிக்கப்பட்டு இரு வேறு துருவங்களானார்கள்...

திரும்ப முதலிலிருந்தா??....நம்ப முடியவில்லை....

அவனா? இப்ப நம்மை கேட்குறான்... என் தங்கச்சியை கட்டிக்க ன்னு....இன்னும் கூட நம்ப முடியாது இன்ப அதிர்ச்சியில் உறைந்து நின்றான்...சிவா....

அச்சிறிய நேரம் கூட வீணாக  விரும்பாதவன் போல ரவி அவசரப்பட்டான்...

 "பதில் சொல்லு  சிவா.....யெஸ் ஆர் நோ ????"

"1000 டைம்ஸ் எஸ் மச்சி.."........உற்சாகமாய்....

"ஆனா எனக்கு பிடிக்கல சிவா...ஸ்ரீ உறுதியா உங்கிட்ட கேட்க சொன்னா.... அவ இஷ்டத்தால  இந்த  கல்யாணம்...

நான் மூணு வருஷத்துக்கு முன்னாடி சொன்னது சொன்னது தான் சிவா...."

அப்புறம்  நீயும் கேள்வி பட்டிருப்ப ஸ்ரீக்கு நிச்சயம் பண்ண ப்ரொபோசல் நின்னு போனத பத்தி எதாவது விளக்கம்  வேணுமா???? கசந்த குரலில்

அதெல்லாம் வேணாம் ரவி ....

வா என்ன சாப்பிடுற சொல்லு....இலகுவாக வேறு பேச்சுக்கு மாற்றினான்...

அடுத்து ரவி தன் கணக்கு பிள்ளை வேலையை தொடங்க...

ஓகே.....சிவா எவ்ளோ வச்சிருக்க சேவிங்ஸ்??? எல்லாத்தையும் குடு....தேதி சொன்னான் ...அன்னைக்கு திருமணம் ரெடி யாய்க்கோ...... ஏ டி எம் கார்டுகள் .பின் நம்பர்கள்...உன் மோதிரத்தை குடு....

அவ்ளோதான் போய்ட்டான்....

கனவு கைசேர்ந்தத்து போதும்.....சிவாவுக்கு....

தேவை என்றால் வைத்து கொள்வதும் ..வேண்டாம் என்றால் கொத்தோடு அத்துக்கொள்வதும் ரவியின்  இயல்பு.....
தெரிந்தாலும் அவன் அப்படி தான் ..விட்டு விட்டான்...

பாசம் கண்ணை மறைக்குது...மத்தபடி யாரையும் ஏமாற்றாதவன்...

இது தான் சிவா....எதிலும் நல்லதை மட்டுமே எடுத்துக்கொள்பவன்.

இனியவன்....பண்பானவன்...பொறுமையானவன்....

அழகனும் கூட....

 வாதுமை நிறத்தில் ஆண்களுக்கே உரிய கம்பீர உடம்பும் ......

கருமையிலும் பள பளக்கும்அடர்ந்த கேசமும்....

கவர்ச்சியான ஆழ்ந்த  சிறு கண்களும்.......

கூர் மூக்கும்....பட்டை மீசைக்கு கீழ் ....

நிறம் மாறாமல் திமிரில் முறுக்கி நிற்கும் முரட்டு அதரங்களும்.....

அவன் அரிதாய் புன்னகைக்கும் போது மின்னலை போல் பளிச்சிடும் முத்து எயிறுகளும் .......

உருண்டு திரண்ட அகன்ற தோள்களும் .....பெரிய ராஜாளியின் சிறகை போன்று கரங்களும்....

தேக்கு  தேகத்தை தாங்கும் உறுதியான
 நீண்ட கால்களும்........கட்டழகனாய் காட்ட...

இளம் பெண்களின் கனவை திருடுபவனாய் அவன் இருப்பதை அவனே அறியான்.....

காரணம்.....ஹாஹா....அவ்ளோ நல்லவன்.....


திருமணத்திற்கு.   சரியாக 10 நாளிருக்க......

இன்று நல்லவனையும் உரசிப்பார்க்க விதிக்கு ஆசை வர....

அவனை இந்த நாள் மாற்றி போடப்போவதை அறியாமல்.....

இரவுவில் இயல்பு போல்.....
தூங்கும் முன் சம்மணம் இட்டு அமர்ந்து  .....

அன்று செய்தவைகளை மனதிலே ஓட்டிப்பார்த்துக்கொண்டிருக்க....

அந்த மோனத்தை கலைக்கும் விதமாய் போன் அழைக்க....

திரையை பார்க்க.....ரவி என்றது....

'என்ன இந்த நேரத்துல....'

அனிச்சையாக ....எடுத்து....

"சொல்லு ரவி..."

"நானும் அம்மாவும் ஊருக்கு கார்டு வைக்க போறோம்...."

 நந்துமொட்டையாய் .சொல்ல....அவன் என்னைக்குத்தான் திறந்த புத்தகமாய் இருந்திருக்கிறான்....

விளங்கா விட்டாலும்....

"ம்ம்ம்...சரி ...மச்சி நல்ல படியா போயிட்டு வா...."

"ஏற்பாடுலாம் எப்படி போய்ட்டுருக்கு சிவா"

"பக்கா மச்சி" சித்தப்பா நல்லா ஹெல்ப் பண்றார்...

"ம்ம்....அப்புறம்....ஒரு ரிக்வஸட் டா????"

"ம்...சொல்லு மச்சி...!!!!"

 "ஸ்ரீ வீட்ல தனியா இருக்கா!!!!"

"ம்ம்......"

'எட்டி பார்த்துக்க சொல்றானோ????'

 'நானும் யோசனையாய் !!!!!!??'

"உனக்கு நல்லா தெரியும்....  ....."

"எவ்வளவோ பிரச்சனைக்கு நடுவில் இந்த கல்யாணம் நடக்குது மச்சி..... உனக்கு கிடைக்கிற பொண்ணே கிடையாது என் தங்கச்சி....."

இதுக்கு உம் சொல்ல கடுப்பு வந்தது..

தொடங்கிட்டான்டா...லூசு..."அட போடா....."


"கேக்குதா மச்சி?....."

  " ம்ம்...சொல்லு ரவி......"

"மச்சி "யை வேணும் என்றே தவிர்த்து......

ஊக்கினேன்....

"அதனால" அவன் திக்க

"அதனால....சொல்ல வரதை சொல்லிரு ....நான் புரிஞ்சிப்பேன்....நந்து..." எரிச்சலை அடக்கிய அமைதியுடன்...


மூன்று வருஷத்திற்கு முன் அணைந்து முடித்த தீயின் சாம்பலில் ஒரு பொறி உயிர் பெற..இவனுள்ளே வெப்பம் ...கூட...

"கல்யாணம் நல்லபடியா முடியுற வரை எங்க வீட்டு சைடு போவதோ..... ஸ்ரீ க்கு போன் பண்ணுவதோ?..... எதுவும் பண்ணிடாத.....சிவா...
எங்க பாமிலி ல எல்லோரும் படிச்சவங்க ....கவுரவம் பார்ப்பாங்க......பார்த்து நடந்துக்கோ....எந்த இஷ்யூம் வராம ...சொல்றத சொல்லிட்டேன்..நல்ல ஆழத்தில் சொல் அம்பு  விட்டு சொருகிட்டு...

பிறகு நல்லவனாக...
"சண்டே ஈவினிங் வந்துடுவேன்....பை மச்சி...."

நான் இவன் ஊருக்கு போறதுக்காக காத்து இருக்குற மாதிரியே பேசுறான்....

இவனுள் ஒரு வேகம் சுறு சுறு வென எழுந்து....

ஏதாச்சும் பண்ணியே ஆகணும் சொல்ல...

யெஸ்...யெஸ்....



No comments:

Post a Comment